தமிழுலக இஸ்லாமிய இணைய அன்பர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இலங்கை திருநாட்டில் முஸ்லிம்கள் தனித்து வாழும் ஊர்களில் அட்டாளைச்சேனைப் பிரதேசமும் முஸ்லிம் மக்களை அதிகளவாகக் கொண்ட பிரதேசமாகும். உலமாக்கள், புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள், கலாபீடங்கள் என பல துறைகளிலும் இவ்வூர் தனித்து விளங்குகிறது.
முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்தை கருத்திற்கொன்டு பல நிறுவனங்கள், அமைப்புகள், கழகங்கள் பல தொண்டுகளை இவ்வூரில் ஆற்றிவருகின்றன இருந்த போதிலும் இஸ்லாத்தின் தூயவடிவத்தை அழிக்கின்ற நாசகார வேலைகளில் தொடர்ந்தும் இஸ்லாத்தின் எதிரிகள் செயற்பட்டு வருவது ஆழ்ந்த மனக்கவலையை இஸ்லாமிய அறிஞர்கள், சமூக காப்பாளர்களின் உள்ளங்களில் ஏற்படுத்தியது. அதன் விளைவே 1990ம் ஆண்டு இஸ்லாத்தின் தூய்மையை காக்கும் நோக்குடனும் சமூக தொண்டுகளை மேம்படுத்தும் நோக்குடனும் ஜம்இய்யத்தில் தர்பிய்யாத்தில் இஸ்லாமியா எனும் பெயரில் இவ்வமைப்பு தோற்றம் பெற்றது.
இன்ஷா அல்லாஹ் வளரும்...........